இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்பொழுது அமைதி சூழ்நிலை நிலவுவதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஏப்ரல் மாதம் அகதிகள் அந்தஸ்து கோரிக்கையை அவுஸ்திரேலியாவும் நிராகத்திருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் பெரும்பாலானோர் இன்னமும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அந்த ஸ்தாபனம் சுட்டிக் காட்டுகின்றது.
யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், குறிப்பிட்ட சில மக்கள் இனப்பாகுபாடு காரணமாக இடையூறுகளை எதிர்நோக்குவதாகவும், ஊடகவியலாளர்கள், பெண்கள், சிறுவர் ஆகியோர் இன்னமும் ... Read More
இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
Posted On 06 Jul 2010 By admin. Under: செய்திகள் தமிழ்.
இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்பொழுது அமைதி சூழ்நிலை நிலவுவதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஏப்ரல் மாதம் அகதிகள் அந்தஸ்து கோரிக்கையை அவுஸ்திரேலியாவும் நிராகத்திருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் பெரும்பாலானோர் இன்னமும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அந்த ஸ்தாபனம் சுட்டிக் காட்டுகின்றது.
யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், குறிப்பிட்ட சில மக்கள் இனப்பாகுபாடு காரணமாக இடையூறுகளை எதிர்நோக்குவதாகவும், ஊடகவியலாளர்கள், பெண்கள், சிறுவர் ஆகியோர் இன்னமும் ... Read More
இந்திய வெளிவிவகார அமைச்சின் அவசர அழைப்பின் பேரில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் அறுவர் கொண்ட குழு இன்று மாலை புதுடில்லி புறப்படுகி றது.
Posted On 05 Jul 2010 By admin. Under: செய்திகள் தமிழ்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் அவசர அழைப்பின் பேரில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் அறுவர் கொண்ட குழு இன்று மாலை புதுடில்லி புறப்படுகி றது.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந் தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந் திரன் ஆகியோர் கொண்ட குழுவே மூன்று நாள் விஜயமாக இன்று புறப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எம். கே.கிருஷ்ணா, வெளிவிவகாரச் செயலா ளர் நிருபமாராவ், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரைக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சு நடத்துவர்.
இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு ஒன்றை ... Read More
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவின் பரப்பான் கண்டல் கிராமத்தில் தற்பொழுது 260 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1300 பேர்வரை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Posted On 05 Jul 2010 By admin. Under: செய்திகள் தமிழ்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவின் பரப்பான் கண்டல் கிராமத்தில் தற்பொழுது 260 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1300 பேர்வரை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அப்பகுதியில் உள்ள பரப்பான் கண்டல் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை யுத்தத்தினால் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பெரியக்குளம், சிறுக்குளம் , பாலைத்தாள்வு,அடைக்கலமோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200ற்கும் மேற்பபட்ட மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைந்து இருக்கிறது. தற்பொழுது தற்காலிக பாடசாலை ஒன்று சற்றுத் தொலைவில் அமைக்கப்பட்டு வருகிறது..
... Read More
ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நைரோபி செல்ல மாட்டார் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Posted On 05 Jul 2010 By admin. Under: செய்திகள் தமிழ்.
ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நைரோபி செல்ல மாட்டார் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு எதிர்கட்சிகளை சேர்ந்த நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சந்தர்ப்பங்களை வழங்கியுள்ள போதும் பொன்சேகா அங்கு செல்ல முடியாது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
... Read More
ஐக்கிய நாடுகள் சபை நியமித்துள்ள ஆலோசனைக் குழு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted On 04 Jul 2010 By admin. Under: செய்திகள் தமிழ்.
ஐக்கிய நாடுகள் சபை நியமித்துள்ள ஆலோசனைக் குழு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் ஆலோசனைக் குழுவிற்கு ஆதரவளிப்பதன் மூலம் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆலோசனைக் குழுவிற்கு ஆதரவளிக்காததனால் சர்வதேச நாடுகள் அழுத்தம் செலுத்தாதெனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகளுக்கு அதரவளிக்க வேண்டிய அவசமியல்லை என ரஸ்யா சீனா மற்றும் அணி சேரா நாடுகள் தெரிவித்துள்ளதாக அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில் உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்கான ஜனாதிபதி ஏற்கனவே ... Read More
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கு எதிராக அணிசேரா அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது
Posted On 04 Jul 2010 By admin. Under: செய்திகள் தமிழ்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கு எதிராக அணிசேரா அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
118 நாடுகளின் உறுப்புரிமையை கொண்ட அணிசேரா அமைப்பு இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ராஜதந்திரிகள்; மத்தியில் வரைபு கடிதம் ஒன்றை விநியோகித்து வருகிறது
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றின் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள இ;ந்த அமைப்பு இலங்கையின் இறைமையை பாதிப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்திற்கு அணிசேரா அமைப்பின் மத்தியில் அங்கீகாரம் கிடைக்காது ... Read More
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்சவின் எச்சரிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மன்னிப்பு கோரவுள்ளது.
Posted On 04 Jul 2010 By admin. Under: செய்திகள் தமிழ்.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்சவின் எச்சரிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மன்னிப்பு கோரவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் மன்னிப்பு கோரும் அறிகுறிகள் தென்படுவதாக, பொது செயலாளர் பான் கீ மூனின் துணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நாளாந்த செய்தி விபரிப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அச்சுறுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை என்ன செய்தது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ... Read More
யாழ்ப்பாணத்தில் குடியேற வேண்டுமாயின் புத்தளத்தைக் கைவிட வேண்டுமென முஸ்லிம்களுக்கு மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயாகமூர்த்தி முரளீதரன்; தெரிவித்துள்ளார்.
Posted On 04 Jul 2010 By admin. Under: செய்திகள் தமிழ்.
யாழ்ப்பாணத்தில் குடியேற வேண்டுமாயின் புத்தளத்தைக் கைவிட வேண்டுமென முஸ்லிம்களுக்கு மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயாகமூர்த்தி முரளீதரன்; தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசித்து வரும் முஸ்லிம் மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளிலிருந்து வெளியேற வேண்டுமேன இடம்பெயர் முஸ்லிம்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து வந்த அநேகமான முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் நிரந்தரமாக குடியேற விருப்பமென்றால் புத்தளத்திலிருந்து நிரந்தரமாக ... Read More
புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Posted On 04 Jul 2010 By admin. Under: செய்திகள் தமிழ்.
புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக புலிகளுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எட்டாயிரமாக உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் புலி ஆதரவாளாகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு - கிழக்கில் கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளை இடைவிடாது தொடருமாறு பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு - கிழக்கில் பெரும் எண்ணிக்கையிலானோர் செல்லிடத் தொலைபேசிகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் இந்த ... Read More


































